குருணாகல், மாவத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி - குருணாகல் வீதியில் வேஉட பகுதியில் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகலிலிருந்து கலகெதர நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்த வயோதிபர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது படுகாயமடைந்த வயோதிபர் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணேகொட, வேஉட பகுதியில் வசிக்கும் 74 வயதுடைய வயோதிபரொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரது சடலம் மாவத்தகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து லொறி சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM