வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 11 வயது சிறுமி உட்பட 4 பேர் பலி

21 Jul, 2024 | 01:40 PM
image

கடந்த 24 மணிநேரத்தில் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 11 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்த விபத்துகள் நேற்று சனிக்கிழமை (20) மதவாச்சி, கெக்கிராவ, அனுராதபுரம் மற்றும் பயாகல பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. 

மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 வீதியில் முச்சக்கரவண்டியும் எரிபொருள் நிரப்பப்பட்ட பௌசரும் நேருக்கு நேர் மோதியதில் 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

மஹமல்கொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே உயிரிழந்துள்ளதுடன் இவ்விபத்து தொடர்பில் பௌசர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கெக்கிராவ - கணேவல்பொல வீதியில் உழவு இயந்திரம் வீதியோரத்தில் உள்ள கல்வெட்டில் மோதி கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் வீதியைக் கடந்த நபர் மீது லொறியொன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, காலி - கொழும்பு வீதியின் பயாகல புகையிரத நிலையத்துக்குத் திரும்பும் சந்தியில் வீதியைக் கடந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்த நபர் பயாகல பிரதேசத்தை சேர்ந்த 71 வயதானவர் ஆவார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19
news-image

ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி -...

2025-02-16 20:52:46
news-image

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பணவீக்கம்...

2025-02-16 16:20:02
news-image

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற...

2025-02-16 21:42:35
news-image

முல்லைத்தீவிற்கு வருகை தந்த பிரதமர்; ஏமாற்றமடைந்த...

2025-02-16 21:44:11
news-image

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் சக்தியாக மீண்டும்...

2025-02-16 21:30:13
news-image

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு

2025-02-16 21:17:06
news-image

யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி...

2025-02-16 19:59:52
news-image

பொதுச்செயலராக சுமந்திரன் நியனம்: இலங்கைத் தமிழரசுக்...

2025-02-16 21:27:42