தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களிடம் இருந்து தூரமாக்கி விட வேண்டுமென்ற சதித் திட்டங்களை பேரினவாத சக்திகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பதற்கு தகுந்த சான்று வடக்கு– கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போன்றோரின் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு சாதகமான பதிலை நல்லாட்சி அரசாங்கம் வழங்காது ஏமாற்றி வருகின்றமையாகும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். இராஜேஸ்வரன் குறிப்பிட்டார். திருக்கோவில் பிரதேசத்திலுள்ள கஞ்சி குடிச்சாறு கிராம மக்களுடனான சந்திப்பின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். இராஜேஸ்வரன் அங்கு மேலும் பேசுகையில்;
எமது மக்கள் கேட்கின்ற விடயங்களை கிடப்பில் போட்டு விட்டு, கேட்காத விடயங்களை வடக்கு, கிழக்கில் அரங்கேற்றி, போரினால் அழிவடைந்த எமது இனத்தை மதுவினால் அழித்து விட அரசாங்கம் குறியாக உள்ளது. அன்று வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிய பல தொழிற்சாலைகளை மூடிவிட்டு மக்கள் விருப்புக்கு முரணான முறையில் கல்குடாவில் மதுபான உற்பத்தி தொழிற்சாலையை நிர்மாணிக்கின்றமை தமிழ்பேசும் சமூகத்தை அழித்தொழிக்கும் அரசின் சதியாகும்.
2015 ஆம் ஆண்டு பலத்த எதிர்பார்ப்புடன் ஆட்சி மாற்றத்தினை கொண்டுவர உழைத்த சிறுபான்மை மக்களை செல்லாக் காசாக பார்க்கும் அரசாங்கத்திற்கு எமது சிறுபான்மை மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM