பங்களாதேஷில் அரசாங்க வேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டு முறைகளிற்கு எதிராக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இதனை அடுத்து பங்களாதேஷ் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை மாணவர்கள் தொடர்பாக இந்தியாவிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம் விழிப்புடன் இருப்பதாக இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் இருந்த 300 இந்திய மாணவர்கள் வெளியேறியுள்ளனர்.
இந்த வாரம் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற வன்முறையில் சுமார் 104 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, சுமார் 2,500 பேர் படுகாயமடைந்ததை அடுத்து பங்களாதேஷில் அதிகாரிகள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களுக்கு பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு இலக்கானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளியன்று பங்காளதேஷ் மாணவர்கள் தலைநகர் டாக்காவில் பொலிஸாரின் தடையை மீறி மாபெரும் பேரணிகளுடன் சிறைச்சாலையை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்தனர். பேரணியையும் அமைதியின்மையையும் அடக்குவதற்கு பொலிஸார் போராடினர்.
வன்முறை சம்பவங்கள் டாக்காவில் மட்மல்ல 26 மாவட்டங்களில் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் "அதிர்ச்சியூட்டும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் ஏப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM