அதிக எண்ணிக்கையில் அடைக்கப்படும் சிறைக்கைதிகள் : கைதிகளின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் அம்பிகா கேள்வி

19 Jul, 2024 | 07:56 PM
image

(நா.தனுஜா)

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இயலுமையை மீறி பெரும் எண்ணிக்கையான சிறைக்கைதிகள் அடைக்கப்படுதல் என்பது வழமையாக இடம்பெற்றுவருவதாகவும், 2018இல் 93 சதவீதமாகக் காணப்பட்ட இவ்வீதம் 2024 இல் 201 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவை நேற்று வியாழக்கிழமை (18) சென்று பார்வையிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, அப்பிரிவின் மோசமான நிலை குறித்து அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளார்.

அப்பதிவில் 'வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் அதன் இயலுமையை விடவும் பன்மடங்கானோர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். சிறைக்கைதிகள் ஒருவரது தோளுக்குமேல் உறங்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்பிரிவில் உள்ள சிறைக்கைதிகளில் போதைப்பொருள் பாவனையாளர்களும், வயது முதிர்ந்தோரும் உள்ளடங்குகின்றனர். 

இந்நிலையில் போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு மாற்றுவதற்கும், புனர்வாழ்வளிக்கப்பட்டோர் மற்றும் நலிவடைந்த நிலையிலுள்ள முதியோரை விடுவிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவின் அப்பதிவை மேற்கோள்காட்டி மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், பெண் சிறைக்கைதிகள் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எரான் விக்ரமரத்ன கருத்து வெளியிட்டிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இயலுமையை மீறி பெரும் எண்ணிக்கையான சிறைக்கைதிகள் அடைக்கப்படுதல் என்பது விதிவிலக்கானது அல்ல எனவும், மாறாக அதுவே இங்கு வழமையாக நடைபெறுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கையின் சிறைச்சாலைகளில் இயலுமையை மீறி அடைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 93 சதவீதமாகக் காணப்பட்டதாகவும்,  2024இல் அது 201 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாணந்துறையில் டிப்பர் வாகனத்தில் மணல் கடத்திய...

2025-01-15 15:54:12
news-image

தென்னிலங்கை அரசியலின் பிரித்தாளும் தந்திரத்திற்கு ஆளாக...

2025-01-15 16:02:47
news-image

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி

2025-01-15 16:00:17
news-image

சீமெந்தின் விலையை 100 ரூபாவால் குறைக்க...

2025-01-15 15:46:58
news-image

"அரசியல் கைதிகள் இல்லை" என்ற பழைய...

2025-01-15 15:13:18
news-image

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-01-15 15:08:00
news-image

சீன ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

2025-01-15 15:04:13
news-image

இந்தியாவின் 76 வது குடியரசு தினத்திற்கு...

2025-01-15 14:53:41
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர்...

2025-01-15 14:33:19
news-image

சிகிரியா இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக...

2025-01-15 14:25:36
news-image

தொடங்கொடை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் வெளியான...

2025-01-15 14:23:57
news-image

மட்டக்களப்பில் தொடர் மழையால் வயல் நிலங்கள்...

2025-01-15 13:41:27