இறக்காமத்தில் உணவு நஞ்சான சம்பவம் :  கைதுசெய்யப்பட்ட இருவர் விளக்கமறியலில்!

Published By: Ponmalar

09 Apr, 2017 | 10:43 AM
image

அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், 203 பேர் சுகவீனமுற்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இறக்காமம் வாங்காமத்திலுள்ள பள்ளியொன்றில் இம்மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற கந்தூரி நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள், அங்கு பரிமாறப்பட்ட உணவை உட்கொண்டதையடுத்தே திடீர் சுகவீனமடைந்தனர்.

இதன் பிறகு இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 203 பேர்  சுகயீனமுற்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார் குறித்த நிகழ்வில் சமயலில் ஈடுபட்ட இருவரை கைதுசெய்து, நேற்று (08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அம்பாறை நீதவான் இவர்களை 2 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

எனினும் குறித்த சந்தேக நபர்கள் குறித்த பிணையை முன்வைக்க முடியாததால், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷங்காய் மாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி அநுர

2026-08-16 08:55:06
news-image

ஆகஸ்ட் 30-இல் சர்வதேச மாநாடு: காணாமல்...

2026-08-16 08:56:43
news-image

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும்...

2026-08-16 11:34:51
news-image

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை...

2026-08-16 09:28:15
news-image

‘ஸ்பைடர் வுமன்’ என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி...

2026-08-16 08:40:39
news-image

சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழி...

2026-08-16 08:39:58
news-image

22 ஆவது திருத்தம் செவ்வாய் பாராளுமன்றில்...

2026-08-16 08:39:12
news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27
news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00