40 வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணங்காததன் விளைவை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “ஜனாதிபதி புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின்” கீழ் கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை கல்வி வலய சிறுவர்களுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இந்நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (18) கம்பஹா நைவல ஜயசிங்க சிட்டி சென்டர் மண்டபத்தில் நடைபெற்றது.
பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இவ் வேலைத்திட்டம் கல்வி உதவித்தொகையாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள 10,126 பாடசாலைகளை உள்ளடக்கிய முதலாம் தரத்திலிருந்து 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் ஒரு இலட்சம் (100,000) மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முழு வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து 3,600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தரம் 1 முதல் 11 வரையிலான மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு தலா 3000 ரூபா புலமைப்பரிசில்களும், உயர்தர மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு தலா 6000 ரூபா வீதம் புலமைப்பரிசில்களும் வழங்கப்படுகின்றன.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 6490 மாணவர்கள் இதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்நிகழ்வில் மினுவாங்கொடை கல்வி வலயத்திற்குட்பட்ட 1,377 பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
இதுதவிர, 1000 ரூபாய் பெறுமதியுடைய புத்தக தொகுதிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு பாடசாலையிலும் மிகக்குறைந்த வசதிகளின் கீழ் கல்வி கற்கும் திறமையான மாணவர்களை தெரிவு செய்து, அந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து நாட்டின் பிள்ளைகளுக்கு தொடர்ச்சியான பாடசாலைக் கல்வியை வழங்குவதற்கும், அதன் மூலம் நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதற்கும் முதலீடுகளை மேற்கொள்வதற்காக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கையாகும்.
மேலும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கருத்து தெரிவிக்கையில்,
"கடந்த காலத்தில் இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி மிகவும் தீவிரமாக இருந்தது என்பதை நாங்கள் அறிவோம். அப்படியிருந்தும் ஜனாதிபதியின் கவனம் இந்த நாட்டின் நலனுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் குவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தைப் பொறுப்பெற்கும் பிள்ளைகளின் குடும்பங்களுக்கு பொருளாதார பலம் தேவைப்படுபவர்களை இனங்கண்டு பிள்ளைகளுக்கு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான தெரிவை எமது மாகாண அலுவலக அதிகாரிகள், அதிபர்களே மேற்கொண்டுள்ளனர். யாருடைய அரசியல் தலையீடும் இல்லை. இந்த திட்டங்கள் குழந்தைகளின் தேவைக்காக செயல்படுத்தப்படுகின்றன. 40 வருடங்களுக்கு முன்னர் கல்வியை சீர்திருத்த அப்போதைய ஜனாதிபதி முயற்சித்துள்ளார்.
அப்போது அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சில குழுக்கள் அதற்கு எதிராகப் போராடி, எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அந்தச் சீர்திருத்தத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த அனுமதிக்கவில்லை. 40 வருடங்களின் பின்னர் இலங்கையில் அந்த கல்வி சீர்திருத்தங்களுக்கு புதிய முகம் கொடுத்து அன்று எதிர்த்த குழு இன்று அதனை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது.
அதற்குக் காரணம், 40 வருடங்களுக்கு முன்னர் எமது பிள்ளைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்த வேலைத்திட்டத்தை எதிர்காலத்தைக் காணும் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி முன்னெடுத்திருந்தால் நாமும் இந்த நாடும் இன்று உலகில் ஒரு மேம்பட்ட கல்வித் துறை உள்ள நாடுகளின் மட்டத்தில் இடம்பிடித்திருக்கும். நாங்கள் 40 ஆண்டுகள் தாமதமாகிவிட்டோம். இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? பொறுப்பை ஏற்றிருக்க வேண்டியவர்கள் பின்னர் நாட்டிற்கு வந்து சர்வதேச மட்டத்திற்குச் சென்று இந்த வேலைத்திட்டத்தின் பகுதிகளை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்த உழைத்தனர்.
அந்த 40 ஆண்டுகளில் நாம் அடைந்த இழப்பை புதுப்பிக்க வேண்டுமானால் இந்த கல்வி சீர்திருத்தங்களில் சேர வேண்டும். பொது நிலை மற்றும் உயர்தரம் கற்பிக்கும் ஆசிரியர்களை கொண்டு வந்து நாட்டின் எதிர்காலத்தை உலகிற்கு எடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தை எமது பிரதேசங்களில் உருவாக்க வேண்டும்.
பொது நிலை மற்றும் உயர்தரம் கற்பிக்கும் ஆசிரியர்களை கொண்டு வந்து நாட்டின் எதிர்காலத்தை உலகிற்கு எடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தை எமது பிரதேசங்களில் உருவாக்க வேண்டும்.
எங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. இவற்றைச் செய்யும் போது அரசாங்கம் என்ற வகையில் வங்குரோத்து நிலைக்குச் சென்று விட்டோம் எனக் கூறி பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நாடாக இதனை எப்படிச் செய்ய முடியும் என்று சிலர் கேட்கின்றனர்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பொருட்கள் அதிகப்படியாக இருக்கும்போது, அதை ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாடுகளுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்காமல், அதிகப்படியானதை எடுத்து கடலில் கொட்டுகிறார்கள். கடலில் போட்டதில் கொஞ்சம் ஏழை நாடுகளுக்கு கொடுத்தால் நல்லது என்று நம்புகிறோம்.
அதேபோன்று பொருளாதார நெருக்கடியின் போது அண்மைக் காலத்தில் சந்தை விலையைக் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு நல்ல விலையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி அதிகப்படியாக இருக்கும் அரிசியை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
வினியோகம் செய்ய முற்பட்டபோதும் குறை சொன்னார்கள். அதிகம் இருந்தால், இல்லாதவர்களுக்குக் கொடுத்தால், விலைவாசியைக் கட்டுப்படுத்தினால், எல்லோருக்கும் நல்லது என்றால் அது நல்லது என்று நான் நினைக்கிறேன். அதை நம்பிக்கையுடன் பார்க்க முடியாதவர்களும் இருக்கிறார்கள்.
குழந்தைகளுக்காக நாம் ஏதாவது செய்தால், 100% வெற்றி பெற முடியாது. ஆனால் அவர்களை நம்பிக்கையுடன் பார்க்க முடியாதவர்களும் இருக்கிறார்கள். நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, இந்த நாட்டு மக்களுக்காக அந்த சவால்களை ஏற்றுக்கொண்டோம்.
2022ஆம் ஆண்டு சவால்களை எதிர்கொண்ட போது ஏற்பட்ட நெருக்கடியை ஏற்றுக்கொள்வதற்கு எவரும் இல்லாத நிலையில் அதற்கு தீர்வை ரணில் விக்கிரமசிங்க வழங்கினார். குழந்தைகளே எதிர்காலம் என்றும், அவர்களுக்குத் தேவையான வளங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் நினைக்கிறார்.
அதன் கீழ்தான் இவை அனைத்தினதும் செயற்பாடுகளும் நடைபெறுகிறது. தொழில்நுட்பத்தை பாடசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும், வகுப்பறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இன்னும் 5 முதல் 10 வருடங்களில் எங்கள் குழந்தைகள் இந்த இடத்திற்கு சென்று விடுவார்கள்.
1989 ஆம் ஆண்டு ரெஜி ரணதுங்க நியமிக்கப்பட்ட போது அவர் பெற்ற சம்பள ஒதுக்கீட்டில் அறுபது முதல் எழுபது வீதத்தை கல்விக்காக செலவிட்டதாக எனக்கு ஞாபகம். அவர் பாடசாலைகளுக்குப் போகும் போது எவ்வளவாவது அதிபர்களுக்குக் கொடுத்து விட்டு வருவார். நாங்கள் ரெஜி ரணதுங்க புலமைப்பரிசில் நிதியத்தை ஆரம்பிக்கும் போது, எனது தாயார் எங்களிடம் பணத்தை முறையற்ற விதத்தில் கொடுக்காமல், பணத்தை முறைப்படி கொடுக்குமாறு கூறினார்.
நாங்கள் உதவித்தொகை நிதியைத் தொடங்கி, குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி பாடசாலைகளுக்கு முறையாக கல்வி உதவித்தொகை வழங்கினோம். நாங்கள் கல்வியில் ஆர்வம் கொண்டவர்கள். நான் 23 வருடங்களாக மாகாண சபை அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் கடமையாற்றுகின்றேன். நான் மாகாண சபையில் அனைத்து பாடங்களுக்கும் பொறுப்பாக பணியாற்றியுள்ளேன்.
எனக்கு பிடித்த பாடம் கல்வி. எனக்கு பிடித்த பாடம் கல்விப் பாடமாகும். மூடப்பட்ட பாடசாலைகளை திறந்து, மூடப்பட்ட பாடசாலைகளை நல்ல நிலைக்கு கொண்டு வந்து, குழந்தைகளுக்கு மாதிரி பாடசாலைகளை கட்டி, குழந்தைகளுக்கு வசதி செய்து கொடுத்தோம். ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு, பட்டதாரிகளுக்கு வாய்ப்புகளும் வேலைகளும் வழங்கப்பட்டன. எங்கள் கல்வித் திட்டத்தில் அனைவரும் ஆர்வமாக உள்ளனர். இங்கு அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.”
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசு மாரசிங்க, கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே, கம்பஹா மேலதிக மாவட்ட செயலாளர் சுனந்தா குணதிலக்க, மினுவாங்கொடை பிரதேச செயலாளர் தனுஜா ராஜகருணா, மினுவாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளர் வஜிர ரணராஜா, ஜனாதிபதி செயலகத்தின் பிரதம கணக்காளர் (கொள்முதல்) கே. தில்ருக்ஷி உட்பட வலய மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், அபிவிருத்தி லொத்தர் சபை அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM