குவைத்திலிருந்து நாட்டுக்குத் திரும்பிய நபரொருவரை குருணாகல், மாவத்தகம பிரதேசத்தில் வைத்துக் கடத்திச் சென்று நாரம்மல பகுதியில் உள்ள வீடொன்றில் அடைத்து வைத்து ஒரு கோடி ரூபா கப்பம் கோரிய நால்வர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கடத்திச் செல்லப்பட்டவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாரம்மல மற்றும் கட்டுபொத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31 முதல் 39 வயதுக்குட்பட்ட நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்டவருடன் குவைத்தில் ஒன்றாக பணியாற்றிய நபரொருவரினால் இந்த கடத்தல் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
சந்தேக நபர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கெப் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM