(எம்.மனோசித்ரா)
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கட்டண மீளாய்வு செய்வதற்காக நீர்க் கட்டணக் கொள்கை மற்றும் நீர்க்கட்டணச் சூத்திரமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் புதிய கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்திற்கான அங்கீகாரம் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
அதில் ஏற்புடைய அனைத்துத் தரப்பினர்களுடன் கலந்துரையாடித் தேவையான அனைத்துத் திருத்தங்களையும் உட்சேர்த்து, புதிய நீர்க் கட்டணக் கொள்கை மற்றும் நீர்க் கட்டணச் சூத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட நீர்க் கட்டணக் கொள்கை மற்றும் திருத்தப்பட்ட நீர்க்கட்டண சூத்திரத்தை 2025ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்காக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM