இன்றைய சூழலில் எம்மில் பலரும் வாகனங்களில் பயணிக்கும் போதோ அல்லது வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் போதோ எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு, தோலில் காயங்கள் உண்டாகும். உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட பிறகு அந்த விபத்தால் ஏற்பட்ட காயங்கள் வடுவாக அல்லது ஆறாத தழும்பாக மாறிவிடும்.
சிலருக்கு இந்த வடு அவர்களுடைய தோலின் இயற்கையான நிறத்திற்கு எந்தவித உறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றால் அதனை அவர்கள் சாதாரணமாக கடந்து சென்று விடுவார்கள். ஆனால் அந்தக் காயங்கள் அசௌகரியத்தையும் தர்ம சங்கடத்தையும், தன்னம்பிக்கையில் பாதிப்பையும் ஏற்படுத்தினால் அதற்காக சிகிச்சை எடுக்க விரும்புவர். மேலும் சிலருக்கு இந்த காயங்களில் கெலாய்டு வடு எனும் பாதிப்பையும் அரிதாக ஏற்படுத்தக் கூடும். இதற்கு தற்போது நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி இருக்கிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
கெலாய்டு வடு என்பது சாதாரண காயங்களால் ஏற்படும் தழும்புகளை விட தடிமனாகவும், பெரிதாகவும் ஏற்படும். இத்தகைய வடுக்கள் பெரும்பாலும் 20 வயது முதல் 30 வயது உள்ள ஆண், பெண் என இரு பாலினத்தவருக்கும் ஏற்படக்கூடும். மேலும் இத்தகைய பாதிப்பு காது மடல்கள், கன்னங்கள், மார்பு பகுதி, கை, கால் ஆகிய பகுதிகளில் ஏற்படுகிறது.
மேலும்,சிலருக்கு இத்தகைய பாதிப்பு ஓரிடத்தில் மட்டும் இல்லாமல் பல இடங்களில் உருவாகிறது. இது உங்களின் ஆரோக்கியத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், உணர்வு ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் இதற்கு முறையான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இத்தகைய கெலாய்டு வடு - உங்களுடைய உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் கொலாஜன் எனும் புரதத்தின் உற்பத்தி சமச் சீரற்ற தன்மையில் இருந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். மேலும் காயங்களால் ஏற்பட்டிருக்கும் சாதாரண தழும்புகள் மீது பூச்சிக்கடி , தீக்காயம் போன்ற பாதிப்பு ஏற்பட்டாலும், முகப்பரு மற்றும் முடி அகற்றும் சிகிச்சையின் போது ஏற்படும் சிறிய அளவிலான பக்க விளைவுகள் காரணமாகவும் இத்தகைய வடுக்கள் ஏற்படக்கூடும்.
அதே தருணத்தில் இவை தொற்று பாதிப்போ அல்லது புற்றுநோய் பாதிப்போ அல்ல என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதே தருணத்தில் இத்தகைய கெலாய்டு வடு ஹைபர்டிராபிக் வடு எனப்படும் சாதாரண காயத்தால் ஏற்படும் தழும்புகளிலிருந்து வேறுபட்டது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய வடுக்கள் எம்முடைய மூட்டுகளில் ஏற்பட்டிருந்தால் அதனை அசைக்கும் போது பாரிய அசௌகரியமும் உண்டாகும். இதனால் இத்தகைய கெலாய்டு வடு பாதிப்பிற்கு அவசியம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால் வைத்தியர்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் தோல் திசு பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.
அதன் பிறகு அதனை அகற்றுவதற்காக நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை, ஊசி வடிவிலான சிகிச்சை, உறைநிலை சிகிச்சை, லேசர் சிகிச்சை, குறைந்த வீரிய திறன் கொண்ட கதிர்வீச்சு சிகிச்சை ஆகியவற்றின் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். இத்தகைய சிகிச்சையின் மூலமும் முழுமையான நிவாரணம் கிடைக்காத போது சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் அளிப்பர்.
வைத்தியர் சிவக்குமார்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM