ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டத்தiணியொருவர் தாக்கல் செய்த மனுகுறித்து சட்டமாஅதிபர் திணைக்களம் ஆட்சேபனை வெளியிட்டுள்ளது.
2015ம் ஆண்டு மே 15ம் திகதி சபாநாயகர் 19 வது திருத்தத்தினை உறுதிப்படுத்தும் விதத்தில் கையெழுத்திட்டார் என தெரிவித்துள்ள பிரதிசொலிசிட்டர் ஜெனரல் கனிஸ்க டி சில்வா ஆகவே சட்டத்தரணி தாக்கல் செய்துள்ள மனுவை தொடர்வதற்கான சட்ட அடிப்படைகள் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி சட்டத்தரணி அருண லக்சிறியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை பிரதம நீதியரசர் உட்பட மூவரடங்கிய நீதியரசர் குழாம் தற்போது ஆரம்பித்துள்ளது.பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று திங்கட்கிழமை (15) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முறையான முறையில் நிறைவேற்றப்படாததால், அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு அனுப்பி, அதனை அங்கீகரிக்கும் வரை , ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசியலமைப்பு மீறப்படுவதாக தீர்ப்பளிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM