தாய்லாந்து விசா : தூதரக அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு வந்தவுடன் அமுலுக்கு வரும்

Published By: Digital Desk 3

15 Jul, 2024 | 01:15 PM
image

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இன்று 15 ஆம் திகதி முதல் தாய்லாந்துக்கு விசா இன்றி செல்ல முடியும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் தாய்லாந்து தூதரகம் இது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு வந்த  பின்னரே இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையர்களுக்கு தாய்லாந்துக்கு விசா இலவசம் தொடர்பில் நேற்று பாங்கொக்கிலிருந்து எந்த உறுதிப்படுத்தலையும் பெறவில்லை. எனவே, உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்தவுடன் இலங்கை குடிவரவு மற்றும் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும். அப்போது, அந்த திட்டம் அமலுக்கு வரும்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையிலுள்ள தாய்லாந்து தூதரகத்தின் இணையத்திலும் புதிய திட்டம் தொடர்பில் எவ்வித அறிவித்தலும் அறிவிக்கப்பட்டவில்லை.

இதேவேளை, இலங்கையர்கள் தாய்லாந்திற்கு விசா இன்றி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டால் இதுவே முதல் முறையாகும்.

தாய்லாந்து குடிமக்கள், விசா இல்லாமல் இலங்கைக்கு வருவதற்கு ஏற்கெனவே இலங்கை அனுமதி வழங்கியுள்ளது.

விசா இன்றி  செல்லும் இலங்கையர்கள் தாய்லாந்தில் 30 முதல் 60 நாட்கள் தங்கி இருக்க முடியும். எவ்வாறாயினும், அங்கு பயணம் செய்யும் இலங்கையர்களிடம் பணம், தங்குமிடம் மற்றும் திரும்புவதற்காக விமான பயண டிக்கெட்டுகளுக்கான சான்றுகள் இருக்க வேண்டும்.

தாய்லாந்து விமான நிலையங்களில் குடிவரவு அதிகாரிகளின் அனுமதியுடன் அந்நாட்டிற்குள் உள்நுழைய முடியும்.

தாய்லாந்து நாட்டின் அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ட்ரைஸ்ரீ தைசரணகுல் தெரிவிக்கையில்,

இந்த புதிய திட்டம் சுற்றுலா பயணிகள் மற்றும் குறுகிய கால வணிக பயணிகளுக்கு பயனளிக்கும். வருகையின் போது விசாவிற்கு தகுதியான நாடுகளின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிக்கும். 

இந்த ஆண்டு தாய்லாந்துக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 35 சதவீதமாக  அதிகரித்துள்ளது. அதன்படி, மொத்தம் 18.2 மில்லியன் சுற்றுலா பயணிகளின் வருகையினால்  24 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டி தந்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் சீனா, மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, ஆண்டுதோறும் சுமார் 350,000 இலங்கையர்கள் தாய்லாந்திற்கு வருகை தருகிறார்கள்.

மேலும், டிஜிட்டல் நாடோடிகள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சமையல் மற்றும் தற்காப்புக் கலைகள் போன்ற திறன்களைக் கற்க விரும்புபவர்களை இலக்காகக் கொண்டு தாய்லாந்து இன்று 15 ஆம் திகதி முதல் டெஸ்டினேஷன் தாய்லாந்து விசாவை (டிடிவி) அறிமுகப்படுத்துகிறது. 

இந்த விசா மூலம் தாய்லாந்தில் 180 நாட்கள் வரை தங்க அனுமதிப்பளிப்பதோடு, ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். விண்ணப்பதாரர்கள் தங்கள் நாட்டில் உள்ள தாய்லாந்து தூதரகத்தில் டிடிவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தாய்லாந்தில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள், முதுகலைப் பட்டப்படிப்புக்குப் பிறகு ஒரு வருடம் தங்கி வேலை தேடவோ, பயணம் செய்யவோ அல்லது ஆராய்ச்சி நடத்தவோ அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் இனப்படுகொலையை மறைக்க வேண்டாம்; பட்டலந்த...

2025-03-20 03:16:34
news-image

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர்...

2025-03-20 03:06:26
news-image

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை...

2025-03-20 02:55:15
news-image

கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண...

2025-03-20 02:51:31
news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38