யாழில் பஸ்ஸில் பயணித்தவர்கள் மீது வாள் வெட்டு - சாரதி, பயணி படுகாயம்

13 Jul, 2024 | 10:53 AM
image

யாழ்ப்பாணத்தில் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த இருவர், பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று (12) வெள்ளிக்கிழமை பயணித்த பஸ்ஸில், கைதடி பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் ஏறியுள்ளனர்.

பின்னர், இந்த இளைஞர்கள் இருவரும் அரியாலை பகுதியில் வைத்து பஸ்ஸில் இருந்து இறங்கி , நடத்துனருடன் முரண்பட்டுள்ளனர். 

இதன்போது, சாரதியும் , பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவரும் , அவர்களை சமரசப்படுத்த முயன்றுள்ளனர்.

இதன்போது, இந்த இரு இளைஞர்களும் , திடீரென தாம் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து , அங்கிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். 

தாக்குதலில் சாரதி மற்றும் பயணி ஆகியோர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வித்துறையில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக...

2025-05-23 13:35:13
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-05-23 13:00:45
news-image

இலங்கையில் முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான...

2025-05-23 12:51:21
news-image

இலங்கை சிறைச்சாலையில் உரிமைகள் இல்லை- உணவுகள்...

2025-05-23 12:38:08
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!

2025-05-23 12:30:09
news-image

பொலிஸ் உயர் பதவிகளில் திடீர் மாற்றம்...

2025-05-23 12:39:03
news-image

தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பான விசாரணைக்...

2025-05-23 12:20:55
news-image

வனாத்தவில்லுவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர்...

2025-05-23 11:36:29
news-image

போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த 18 மில்லியன்...

2025-05-23 11:35:11
news-image

சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர்...

2025-05-23 11:32:16
news-image

ஆசிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்...

2025-05-23 11:28:22
news-image

நுவரெலியாவில் வாகனங்கள் தீவிர பரிசோதனை !

2025-05-23 11:54:35