சன நெரிசலுடன் பயணித்த ரயிலிலிருந்த பெண் திடீர் சுகயீனுமுற்று வைத்தியசாலையில் அனுமதி

12 Jul, 2024 | 05:00 PM
image

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக சன நெரிசலுடன் பயணித்த ரயிலொன்றில் இருந்த பெண் ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டையிலிருந்து பொல்கஹவல நோக்கிப் பயணித்த ரயிலிலிருந்த 53 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சுகயீனமுற்றுள்ளார்.

இந்த பெண் ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும் போது சன நெரிசல் காரணமாக சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டு திடீரென சுகயீனமுற்றுள்ளார்.

இதனையடுத்து இந்த பெண் கம்பஹா ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து அம்பியுலன்ஸ் மூலம் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பின்னர், இந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-05-25 06:26:58
news-image

அடுத்த ஆண்டு இந்த நாளில் மக்களால்...

2025-05-24 21:03:01
news-image

சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் ;...

2025-05-24 21:02:42
news-image

நெக்ஸ்ட் தொழிற்சாலையின் ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பதே...

2025-05-24 21:02:12
news-image

நெக்ஸ்ட் நிறுவனம் ஒரு பில்லியன் யூரோ...

2025-05-24 13:09:56
news-image

16 ஆண்டுகளின் பின் தீவிரமடைந்துள்ள சிக்குன்குனியா...

2025-05-24 13:07:58
news-image

9 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின்...

2025-05-24 16:35:47
news-image

நீர்கொழும்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்ப...

2025-05-24 17:15:54
news-image

பொலிஸ் நிலையங்களில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட...

2025-05-24 16:05:09
news-image

நல்லூர் ஆலயசூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல்...

2025-05-24 16:58:03
news-image

உணவக உரிமையாளர் வெட்டி கொலை ;...

2025-05-24 15:33:48
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-05-24 15:15:55