ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக சன நெரிசலுடன் பயணித்த ரயிலொன்றில் இருந்த பெண் ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டையிலிருந்து பொல்கஹவல நோக்கிப் பயணித்த ரயிலிலிருந்த 53 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சுகயீனமுற்றுள்ளார்.
இந்த பெண் ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும் போது சன நெரிசல் காரணமாக சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டு திடீரென சுகயீனமுற்றுள்ளார்.
இதனையடுத்து இந்த பெண் கம்பஹா ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து அம்பியுலன்ஸ் மூலம் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பின்னர், இந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM