ஆர்ஜென்டீனாவில் பாலியல் குற்றச்சாட்டினால் பிரெஞ்சு றக்பி அணி வீரர்கள் கைது

Published By: Digital Desk 7

11 Jul, 2024 | 01:04 PM
image

(ஆர்.சேது­ராமன்)

பிரான்ஸின் தேசிய றக்பி அணி வீரர்கள் இருவர் பாலியல் குற்­றச்­சாட்­டுகள் கார­ண­மாக ஆர்­ஜென்­டீ­னாவில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

ஒஸ்கார் ஜேகு (21), ஹியூகோ ஓ ராதோ (20) ஆகிய இரு வீரர்­களும் ஆர்­ஜென்­டீன தலை­நகர் புவ.னேஸ் அயர்ஸில் திங்­கட்­கி­ழமை (08) கைது செய்­யப்­பட்­டனர். இவர்கள் இரு­வரும் ஆர்­ஜென்­டீ­னாவின் மென்­டோஸா நக­ருக்கு அனுப்­பப்­ப­ட­வுள்­ளனர் என உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ள னர்.

பிரான்ஸ் அணி தற்­போது தென் அமெ­ரிக்­காவில் சுற்­றுலா மேற்­கொண்­டுள்­ளது. மெண்­டோஸா நகரில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற றக்பி டெஸ்ட் போட்­டியில் ஆர்­ஜென்­டீ­னாவை  28-13 புள்­ளிகள்  விகி­தத்தில் பிரான்ஸ் வென்­ற­து.  இப்­போட்­டி­யி­லேயே மேற்­படி வீரர்கள் இரு­வரும் சர்­வ­தேச றக்­பிக்கு அறி­மு­க­மா­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது. அன்­றி­ரவு மெண்­டோஸா நகரில் பிரெஞ்சு  அணி­யினர் தங்­கியிருந்­தனர். இவ்­வீ­ரர்கள் மீதான குற்றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்டால் அது மிகவும் பார­தூ­ர­மா­னதாகும் என பிரெஞ்சு றக்பி சம்­மே­ள­னத்­டதின் தலைவர் புளோ­ரியன் கிறில் தெரி­வித்­துள்ளார். இந்த விசா­ர­ணையின் பெறு­பேற்­றுக்­காக தான் காத்­தி­ருப்­ப­தா­கவும் அவர் கூறினார்.

மெண்­டோஸா வழக்குத் தொடுநர் அலு­வ­ல­கத்தின் பேச்­சாளர் மார்ட்டின் அஹு­மதா இது தொடர்­பாக கூறு­கை யில், விசா­ர­ணை­க­ளுக்­காக புவனேஸ் அயர்ஸுக்கு செல்­ல­வுள்­ளதாவும், பாதிக்­கப்­பட்­ட­வரின் வாக்­கு­மூ­லத்­து டன் விசா­ரணை முடிவு ஒத்­தி­ருந்தால், குற்­றப்­பத்­திரம் தாக்கல் செய்­யப்­படும் எனவும் தெரி­வித்தார்.

ஜேகோ, ஓராதோ இரு­வரும் கடந்த வருடம் 20 வய­துக்­குட்­பட்­டோ­ருக்கான உலக சம்­பி­யன்ஷிப் போட்­டி யில் பட்டம் வென்ற பிரெ ஞ்சு அணியில் இடம்­பெற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. பிரெஞ்சு றக்பி அணி நேற்று புதன்கிழமை உருகுவேயுடன் மோதியது.  அதன்பின் அவ்­வணி மீண்டும் ஆர்­ஜென்­டீ­னா­வுக்குச் சென்று, நாளை மறுதினம் சனிக்கிழமை இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் விளை­யா­ட­வுள்­ளது.

அந்­ந­க­ரி­லுள்ள ஹோட்­ட­லொன் றில் பெண்­ணொ­ரு­வ­ருக்கு எதி­ராக மேற்­படி வீரர்கள் இருவரும் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டனர் என உள் ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைய டுத்து இரு வீரர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு உள்ளூர் அதிகா ரிகள் உத்தரவிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20