இன்றைய சூழலில் மேலத்தேய கலாச்சாரம் மீது மோகம் கொண்ட இளம் தலைமுறையினர் பாரம்பரிய சிகரட்டை புகைப்பதற்கு பதிலாக வேப் எனும் இலத்திரனியல் புகைப்பானை புகைக்க தொடங்கி இருக்கிறார்கள்.
இது சிகரட் புகை பிடிப்பதற்கு மாற்று என்று கருதி, இவர்கள் இதனை புகைக்கிறார்கள். ஆனால் இம்மாதிரியான இலத்திரனியல் புகைப்பான் இதயம் மற்றும் நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
சந்தையில் கிடைக்கும் புகையிலைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய சிகரட்டை புகைப்பதால் அவர்களிடத்தில் ஒரு வகையினதான விரும்பத்தகாத மணம் வீசும். ஆரோக்கியம் கெடும். மேலும் சிலர் இத்தகைய பாரம்பரிய சிகரட் புகை பிடிப்பதில் அடிமையாகி இருப்பார்கள்.
இவர்களை அத்தகைய பழக்கத்திலிருந்து மீட்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த இலத்திரனியல் புகைப்பான். இது ஒரு வகையில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு தற்காலிக நிவாரணம் வழங்கும் என்றாலும், தற்போது இத்தகைய இலத்திரனியல் புகைப்பானிலும் நிக்கோட்டின் மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் அவை பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இத்தகைய இலத்திரனியல் புகைப்பான் புகைப்பதும் ஆரோக்கியமானதும் அல்ல. பாதுகாப்பானதும் அல்ல என்றும் சுகாதாரத்துறை வல்லுனர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இத்தகைய இலத்திரனியல் புகைப்பான் புகைபிடிப்பதாலும், பழகுவதாலும், அதற்கு அடிமையானவர்களும் தற்போது அதிகரித்து வருவதாகவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
மேலும்,வேப் எனப்படும் இலத்திரனியல் புகைப்பானிலும் அதிக புகைக்காக நிக்கோட்டின் மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் புற்றுநோய், நுரையீரல் தொற்று பாதிப்புகள், இதயம் தொடர்பான பாதிப்புகள் ஆகியவை ஏற்படும். எனவே பாரம்பரிய சிகரட் புகைப்பதற்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறதோ.! அதே அளவிற்கு இத்தகைய இலத்திரனியல் புகைப்பான்களும் ஏற்படுத்துகிறது என வைத்தியர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
வைத்தியர் தீபா செல்வி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM