வேன் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு

09 Jul, 2024 | 05:56 PM
image

பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு - உஸ்வெட்டகெய்யாவ வீதியில் உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் நேற்று (8) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பிலிருந்து உஸ்வெட்டகெய்யாவ நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியில் பயணித்த பெண் பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது படுகாயமடைந்த பெண் பாதசாரி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது, வேன் சாரதி தப்பிச் சென்று பின்னர்  பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வேனுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-05-23 12:59:11
news-image

இலங்கையில் முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான...

2025-05-23 12:51:21
news-image

இலங்கை சிறைச்சாலையில் உரிமைகள் இல்லை- உணவுகள்...

2025-05-23 12:38:08
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!

2025-05-23 12:30:09
news-image

பொலிஸ் உயர் பதவிகளில் திடீர் மாற்றம்...

2025-05-23 12:39:03
news-image

தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பான விசாரணைக்...

2025-05-23 12:20:55
news-image

வனாத்தவில்லுவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர்...

2025-05-23 11:36:29
news-image

போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த 18 மில்லியன்...

2025-05-23 11:35:11
news-image

சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர்...

2025-05-23 11:32:16
news-image

ஆசிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்...

2025-05-23 11:28:22
news-image

நுவரெலியாவில் வாகனங்கள் தீவிர பரிசோதனை !

2025-05-23 11:54:35
news-image

புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில்...

2025-05-23 11:40:59