இரத்தினபுரி பலாங்கொடையில் தோட்ட தொழிலாளர்கள் 1,700 ரூபாய் சம்பளம் கோரி ஆர்ப்பாட்டம்

09 Jul, 2024 | 05:52 PM
image

இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடையில் பல பகுதிகளில் தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை பணிக்கு செல்லும் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மே மாதம் வழங்குவதாக கூறிய 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்காததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 1,700 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கோரி இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பலாங்கொடை முருங்கவத்த தோட்ட தொழிலாளர்கள் முருங்கவத்த தோட்த்தில் வைத்து இன்று (09) செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் வேலையில் சுமார் 15 நிமிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பலாங்கொடை சிசில்டன் தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் நேற்று (09) காலை பணிக்கு செல்லும் வேலையில் சுமார் 15 நிமிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாளாந்த சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்படாவிட்டால் இனி வரும் தேர்தலில் மலையக மக்களிடம் வாக்குகள் கேட்டு வர வேண்டாம் எனவும் இம்முறை எந்த கட்சிக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைதான 14 இந்திய மீனவர்களுக்கும் தலா...

2025-02-19 16:33:31
news-image

அம்பாறை - வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் பகுதியில்...

2025-02-19 16:22:06
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 16:23:48
news-image

“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு...

2025-02-19 16:41:25
news-image

பல பெண்களுக்கு வட்ஸ்அப் செயலியினூடாக ஆபாச...

2025-02-19 14:59:22
news-image

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட ஜீப்...

2025-02-19 14:25:20
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப் பின்னால்...

2025-02-19 14:24:32
news-image

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு ;...

2025-02-19 14:40:07
news-image

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - இந்திய...

2025-02-19 13:24:22
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-19 14:59:24
news-image

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5...

2025-02-19 12:47:30
news-image

திவுலபிட்டிய ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

2025-02-19 12:29:39