தென் மாகாண பாடசாலைகளுக்கு இந்திய நன்கொடையின் கீழ் டிஜிட்டல் உபகரணங்கள் கையளிப்பு !

08 Jul, 2024 | 06:33 PM
image

தென் மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கு தேவையான டிஜிட்டல் உபகரணங்களை 2024 ஜூலை 6 ஆம் திகதி காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கையளித்தனர்.  

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

தென் மாகாணத்தில் 200 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுவதற்காக இந்திய அரசின் நன்கொடை உதவி திட்டத்தின் கீழ் இந்த டிஜிட்டல் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்த திட்டம் மாகாணத்தில் உள்ள 200  பாடசாலைகளுக்கு தேவையான டிஜிட்டல் கருவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன்  இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள டிஜிட்டல் வளங்கள் மற்றும் ஏனைய மூலங்களிலிருந்து அம்மாணவர்கள் பயனடைய உதவும். 

இந்நிகழ்வில் உரை நிகழ்த்தியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  கல்வித்துறையில் இலங்கைக்கு பல வழிகளிலும் ஆதரவு வழங்குகின்றமைக்காக இந்திய அரசாங்கத்துக்கும் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில்,  அண்மைய காலப்பகுதியில் கல்வித்துறையில் இந்தியா அளப்பரிய  தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்திருப்பதாக உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் இலங்கையில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களில் அவ்வாறான முன்னேற்றங்கள் மூலமான பலன்களைபெற இந்திய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.

தென் மாகாணத்தில் மக்களை இலக்காகக் கொண்டு பல்வேறு திட்டங்களை இந்திய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர்,  அம்மாகாணத்தின் முன்று மாவட்டங்களிலும் உள்ள வீடற்ற குடும்பங்களுக்காக இந்திய அரசாங்கம் 1300க்கும் அதிகமான வீடுகளை நிர்மாணித்துவருவதாகவும் விசேடமாக குறிப்பிட்டார். 

உயர் பெறுபேற்று சமூக அபிவிருத்தி திட்ட கட்டமைப்பின் கீழ் குறித்த தென்மாகாணத்துக்கான ஸ்மாட் வகுப்பறைகள் திட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இக்கட்டமைப்பின் கீழ் 18 நன்கொடைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 5.5 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12
news-image

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாத...

2025-02-08 16:04:02
news-image

கொழும்பு - வெல்லவாய வீதியில் விபத்து...

2025-02-08 15:43:57
news-image

இராமகிருஷ்ண மிஷனின் கிளை திங்கள் கொட்டகலையில்...

2025-02-08 14:51:08
news-image

மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை :...

2025-02-08 15:49:12
news-image

குருணாகலில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-08 15:58:20
news-image

பெப்ரவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில்...

2025-02-08 15:16:46