ஜனநாயகத்தில் கைவைக்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது - ஹர்ஷண ராஜகருணா

Published By: Digital Desk 7

08 Jul, 2024 | 06:45 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனநாயகத்தில் கைவைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. எனவே நேரத்தில் தேர்தலை நிச்சயம் நடத்த வேண்டிய நிர்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தலை நடத்தாமலிருப்பதற்கே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார். ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், தவிசாளரும் தொடர்ந்தும் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே வேட்பாளர் என ஒரு சந்தர்ப்பத்தில் கூறிவந்தவர்கள், பின்னர் தேர்தல் நடத்தப்படக் கூடாது எனக் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலிலும் இதே உத்தியையே பின்பற்றினர். தேர்தலுக்கான பணத்தை வழங்குமாறு நீதிமன்றத்தால் நிதி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பையும் கவனத்தில் கொள்ளாது உள்ளுராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்தியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை அறிவிக்கும் அதிகாரம் இன்னும் 10 நாட்களில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும்.

ஆணைக்குழுவுக்கு அந்த அதிகாரம் கிடைப்பதற்கு முன்னர் இவ்வாறு நீதிமன்றம் சென்றுள்ளனர். எனினும் நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. ஜனநாயகத்தில் கைவைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டுமெனில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.

தேர்தலை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பரந்துபட்ட கூட்டணியொன்று அமைக்கப்படும். அரசியல்வாதிகளை மாத்திரமின்றி நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் மக்களை எம்முடன் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம். எதிர்வரும் இரு வாரங்களில் பெருமளவானோர் எம்முடன் இணைவர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டது முதலை

2026-03-12 16:36:12
news-image

அரசாங்கம் கறுப்புச்சந்தை வியாபாரி போல் செயற்படுகிறது...

2026-03-12 16:27:47
news-image

ஜனாதிபதியை சந்தித்தனர் மின்சார சபை பொறியியலாளர்...

2026-03-12 16:23:50
news-image

இந்த ஆண்டு 'சிசு சரிய' சேவையில்...

2026-03-12 16:19:17
news-image

மட்டு. மண்முனை பாலத்திற்கு அருகில் சட்டவிரோத...

2026-03-12 15:42:14
news-image

ஆபத்தான முறையில் முச்சக்கரவண்டி செலுத்திய இளைஞர்...

2026-03-12 15:31:36
news-image

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர்...

2026-03-12 15:27:26
news-image

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி நேரடி...

2026-03-12 15:27:01
news-image

யாழில் கார் - முச்சக்கரவண்டி மோதி...

2026-03-12 14:32:42
news-image

கண்டியில் பாடசாலை பணிப்பாளரின் வாகனம் மோதி...

2026-03-12 14:22:29
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-12 14:14:39
news-image

​ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் என்பது...

2026-03-12 14:00:02