வாகரை கிருமிச்சை குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு

07 Jul, 2024 | 03:35 PM
image

வாகரை கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.  

நீரில் மூழ்கிய நிலையிலேயே இந்த மீனவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார். 

உயிரிழந்த நபர் (50) கிருமிச்சை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் 2 பிள்ளைகளின் தந்தை என்றும் கூறப்படுகிறது. 

இவர் வழமைபோல அதிகாலையில் வீட்டிலிருந்து கிருமிச்சை குளத்தில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார்.  பகல் பொழுதாகியும் அந்த மீனவர் வீடு திரும்பாததையடுத்து அவரை உறவினர்கள் தேடிச் சென்றபோது  கரையில் அவருடைய தோணி மிதப்பதை கண்டுள்ளனர். 

இதனையடுத்து கடற்படையினர் இயந்திர படகு மூலம் அந்த இடத்தில் தேடியபோது மீனவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் வாகரை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 





முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 10:59:21
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04
news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51