வாகரை கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கிய நிலையிலேயே இந்த மீனவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் (50) கிருமிச்சை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் 2 பிள்ளைகளின் தந்தை என்றும் கூறப்படுகிறது.
இவர் வழமைபோல அதிகாலையில் வீட்டிலிருந்து கிருமிச்சை குளத்தில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். பகல் பொழுதாகியும் அந்த மீனவர் வீடு திரும்பாததையடுத்து அவரை உறவினர்கள் தேடிச் சென்றபோது கரையில் அவருடைய தோணி மிதப்பதை கண்டுள்ளனர்.
இதனையடுத்து கடற்படையினர் இயந்திர படகு மூலம் அந்த இடத்தில் தேடியபோது மீனவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் வாகரை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM