அப்பாசாமி தலைமையிலான யாத்திரீகர் குழு கதிர்காமத்துக்கான பாத யாத்திரையை உகந்தையில் இருந்து ஆரம்பித்து, 5 நாட்கள் காட்டுவழியாக நடந்து நேற்று வெள்ளிக்கிழமை (05) கதிர்காம கந்தன் ஆலயத்தை சென்றடைந்தனர்.
கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த கொடியேற்றத்தை முன்னிட்டு பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயம், திருகோணமலையில் உள்ள ஆலயங்கள், வெருகலம்பதி முருகன் ஆலயம், மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம், திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், பாணமை ஊடாக உகந்தை முருகன் ஆலயம், அங்கிருந்து காட்டுவழியாக சுமார் 55 கிலோமீற்றர் தூரம் ஆறுகள், குளங்களை கடந்து காட்டில் அமைந்துள்ள கபிலித்தை முருகன் மற்றும் வைரவர் ஆலயங்கள், செல்லக் கதிர்காமம் ஆகிய ஆலயங்களுக்கு சென்று தரிசித்துவிட்டு, அங்கிருந்து சுமார் 850 கிலோ மீற்றர் தூரம் நடந்து கதிர்காமகந்தன் ஆலயத்துக்கு சென்று கொடியேற்றத்தில் கலந்துகொண்டு தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதே வழக்கம்.
இதன் அடிப்படையில் கதிர்காமத்துக்கான உகந்தை காட்டுவழிப் பாதை கடந்த 30ஆம் திகதி சமய சடங்குகளுடன் திறக்கப்பட்டது.
இதனை அடுத்து, அங்கிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சுமார் 5 நாட்கள் நடைபயணமாக சென்று கதிர்காமத்தை அடைந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM