மலேசியாவில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இரசாயனக் கசிவு ; 39 பேர் பாதிப்பு

Published By: Digital Desk 3

05 Jul, 2024 | 01:53 PM
image

மலேசியாவில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை (04) விமான பராமரிப்பு பகுதியில் இரசாயனக் கசிவு ஏற்பட்டதில் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலுள்ள விமான பராமரிப்பு பகுதியில்  வியாழக்கிழமை அதிகாலை இரசாயனக் கசிவு ஏற்பட்டுள்ளது.

பயணிகள் முனையத்தில் இருந்து தனித்தனியாக இருக்கும் விமான பராமரிப்பு பகுதியில் இயங்கும் மூன்று நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் இரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

39 பேருக்கு தலைச்சுற்றல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. அதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மெத்தில் மெர்காப்டன் என்ற இரசாயனமே கசிந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவில் வாசனைக்காக சேரக்கப்படுகிறது. விமான பராமரிப்பு பகுதியிலுள்ள பயன்படுத்தப்படாத தொட்டியில் இருந்து மெத்தில் மெர்காப்டன்  கசிந்துள்ளது.

கசிவு சீர் செய்யப்பட்டு தொட்டி அகற்றப்படும்  என தீயணைப்பு பிரவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போர் வேண்டாம் ; சுதந்திர பாலஸ்தீனம்...

2026-03-16 13:12:57
news-image

ஹோர்முஸ் நீரிணையை மீள திறக்க ட்ரம்ப்...

2026-03-16 12:02:03
news-image

டுபாய் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன்...

2026-03-16 09:05:54
news-image

குவைத் விமான நிலையம் மீது ட்ரோன்...

2026-03-16 04:43:39
news-image

மத்திய கிழக்குப் போரை உடனடியாக நிறுத்துமாறு...

2026-03-15 21:30:14
news-image

ஈரானில் இணையத் தடை 16 நாட்களாக...

2026-03-15 21:52:24
news-image

நேபாளத்தில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து...

2026-03-15 16:39:45
news-image

ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக...

2026-03-15 14:28:17
news-image

பாரிஸில் அமெரிக்கா - சீனா உயர்மட்டப்...

2026-03-15 14:15:47
news-image

அமெரிக்காவுக்கு இராணுவ விமானப் பயண அனுமதியை...

2026-03-15 12:21:03
news-image

உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டி: மெக்சிகோ...

2026-03-15 12:23:18
news-image

ஹோமுஸ் நீரிணையைப் பாதுகாக்க பிரித்தானியா உள்ளிட்ட...

2026-03-15 10:46:06