புதிதாக ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் 1426 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் 01 கிலோ 86 கிராம் ஹெரோயின், 782 கிராம் 722 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் , 03 கிலோ 774 கிராம் கஞ்சா, 01 கிலோ 100 கிராம் மாவா, 550 கிராம் 700 மில்லி கிராம் மதன மோதகம், 86 கிராம் 18 மில்லி கிராம் போதைப்பொருள் மற்றும் 1085 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செயயப்பட்ட 1,403 சந்தேக நபர்களில், 213 சந்தேக நபர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 17 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் .
அத்துடன் பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புடைய 04 சந்தேகநபர்கள் நேற்று வியாழக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரையான காலப்பகுதிக்குள் பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புகளை பேணிய 795 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM