யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபராக இருந்த மருதலிங்கம் பிரதீபன் இன்று (4) யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபராக தனது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் காலை 09 மணிக்கு நடைபெற்றது.
இதன்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் வரவேற்கப்பட்டு, பொன்னாடை போர்த்தப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடமைகளை பொறுப்பேற்றார்.
இதில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி எஸ்.ஸ்ரீமோகன் மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் நேற்று (03) பிரதமர் அலுவலகத்தில் வைத்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபனுக்கான நியமனம் வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM