பிரதான ஊடகங்களால் போதியளவு விவாதிக்கப்படாத விடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐந்து நாள் புகைப்படக் கண்காட்சி கொழும்பு லயனல் வென்ட் கலை மையத்தில் இன்று (4) முதல் நடைபெறுகிறது.
"UNCOVER கண்காட்சியானது மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம், நில அபகரிப்பு மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிஜ வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் மறைக்கப்பட்ட கதைகளையும் மலையக தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளையும் அம்பலப்படுத்தும்” என இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக கூட்டணியின் 'எக்ட் நவ்' (Act Now) பிரச்சாரம் தெரிவிக்கிறது.
இரண்டாவது நாள் கண்காட்சியில் வடக்கு, கிழக்கில் நில அபகரிப்பு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளரும் ஊடகவியலாளருமான ஸ்ரீதரன் சோமீதரனால் உருவாக்கப்பட்ட ‘தாய்நிலம்’ ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இறுதி நாளான ஜூலை 8ஆம் திகதி மலையகத் தமிழ் சமூகத்துக்கு நீதி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஜூலை 5 மற்றும் 8ஆம் திகதிகளில் விசேட அமர்வுகள் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM