நீட் எனும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது - விஜய் !

03 Jul, 2024 | 03:24 PM
image

'நீட் எனும் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது' என தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்திருக்கிறார். 

தமிழகத்தில் நடைபெற்ற 'ஓ' லெவல் மற்றும் 'ஏ' லெவல் தேர்வுகளில் அதிக பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்த சென்னை உள்ளிட்ட பத்தொன்பது மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது. இரண்டாவது கட்டமாக நடைபெறும் இந்த விழாவில் நடிகர் விஜய் பங்கு பற்றி சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்குகிறார்.

இதற்கு முன்னதாக அந்நிகழ்வில் நடிகர் விஜய் பேசியதாவது, 

நீட் தேர்வால் தமிழக கிராமத்தில் உள்ள ஏழை மாணவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை.

நீட் தேர்வில் மூன்று பிரச்சனைகள் உள்ளது. நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிராக உள்ளது. 1975 ஆம் ஆண்டிற்கு முன் கல்வி என்பது மாநில பட்டியலில் தான் இருந்தது. அதன் பிறகு தான் மத்திய அரசின் கீழ் வந்தது.

ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரானது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல. மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு என் சி ஆர் டி எனும் பாடத் திட்டத்தின்படி நடத்தப்படும் தேர்வை எப்படி எல்லோராலும் சமமாக எழுத முடியும். அதுவும் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வை எழுதுவது என்றால் யோசித்துப் பார்க்க வேண்டும்.

நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை பற்றி நம் அனைவருக்கும் தெரியும் இதன் மூலம் இந்த தேர்வு மீதான நம்பகத் தன்மை மக்கள் மத்தியில் இழந்து விட்டது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதனை கால தாமதம் செய்யாமல் மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

நிரந்தர தீர்வாக கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து நீக்கி, மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும். இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து சிறப்பு பொதுப் பட்டியல் என்ற ஒன்றை உருவாக்கி அதில் கல்வி, சுகாதாரத்தை கொண்டு வர வேண்டும்.

இவ்விடயத்தில் மாநில அரசுக்கு முழு சுதந்திரத்தை அளிக்க வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் கல்லூரிகளுக்கு வேண்டுமென்றால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளட்டும். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எனது பரிந்துரை. ஆனால் இது நடக்குமா! நடக்க விடுவார்களா! என்றெல்லாம் எனக்குத் தெரியாது. இது தொடர்பான எனது பார்வையை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

மாணவர்களாகிய நீங்கள் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகாமல் மகிழ்ச்சியாக படிக்க வேண்டும். இந்த உலகம் மிகப் பெரியது. அதில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஏதேனும் ஒரு விடயத்தில் தோல்வி அடைந்து விட்டால்.. முடங்கி விடாதீர்கள். தோல்வி அடைந்தால் கடவுள் இன்னும் நிறைய வாய்ப்புகளை உங்களுக்காக வைத்துக் கொண்டிருக்கிறார் என்று பொருள். அது என்னவென்பதை கண்டுபிடியுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிவியாவில் கோர விபத்து ; 30...

2025-02-18 16:23:00
news-image

பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

2025-02-18 14:44:05
news-image

சர்ச்சைக்குரிய பிரபல யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு...

2025-02-18 14:59:48
news-image

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி.. விஷத்தைச்...

2025-02-18 14:37:48
news-image

“ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால்...

2025-02-18 12:25:23
news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டதில்...

2025-02-18 13:23:52
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01
news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-18 09:32:42
news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31
news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32