அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள காரணங்களை சபாநாயகர் சபையில் தெரிவிப்பு !

02 Jul, 2024 | 11:42 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட 'அரச நிதி முகாமைத்துவம்' சட்டமூலத்தின் சில சரத்துக்கள் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் நிறைவேற்றபப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை (02) சபாநாயகரின் அறிவிப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார். 

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அரசியலமைப்பின் 121(1)வது சரத்தின் பிரகாரம் உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட 'அரச நிதி முகாமைத்துவம்' சட்டமூலத்தில் சில சரத்துக்கள் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் நிறைவேற்றபப்பட வேண்டும்.

 அதன்படி,  "நீதித்துறை சேவை உறுப்பினர்கள்" என்ற வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்ட விளக்கம் அரசியலமைப்பின் 3வது பிரிவுடன் வாசிக்கப்பட்ட 4(சீ),  உறுப்பு 12(1) மற்றும் பிரிவு 108 ஆகியவற்றுடன் முரண்படுகிறது.  

அவை பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மூலமாகவும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றப்பட வேண்டும். எனினும் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சுருக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டபடிஇ பிரிவு 71 இல் "நீதிச் சேவை உறுப்பினர்கள்" என்ற வார்த்தைகளுக்கு வரைவிளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.  

மற்றும் பிரிவு 3(2)(பி) நீக்கப்பட வேண்டும் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பின் சுருக்கத்தில் முன்மொழியப்பட்ட புதிய துணைப்பிரிவு சேர்க்கப்பட்டால் அந்த முரண்பாடுகள் நீங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  "அரசுக்குச் சொந்தமான நிறுவனம்" என்ற வார்த்தைகளுக்கு வழங்கப்பட்ட விளக்கம் அரசியலமைப்பின் 12(1) மற்றும் 148 வது பிரிவுக்கு முரணாக உள்ளது மற்றும் அதன் சுருக்கத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இருந்தாலும் கூடஇ பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மேலும் சில சரத்துக்களை நிறைவேற்றவும் விசேட பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமாகும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40