இந்திய ரசிகர்கள் மாத்திரமன்றி உலக ரசிகர்கள் எதிர்பார்த்த 10ஆவது ஐ.பி.எல் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.
உலக கிரிக்கெட் அணிகளின் முன்னணி வீரர்கள் இத்தொடரில் பங்கேற்பதால் ஒவ்வொரு போட்டியும் பரபரப்பாக அமையும்.
இதேவேளை ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் எந்த அணி வெற்றி பெறும் அல்லது தோல்வியை தழுவும் என ரசிகர்களும் கணித்து வருகின்றார்கள்.
இந்நிiயில் மும்பையைச் சேர்ந்த கிரீன்ஸ்டோன் லோபோ என்ற பிரபல ஜோதிடர் இவ் வருடம் எந்த அணி ஐ.பி.எல். கிண்ணத்தை சவீகரிக்கும் என அறிவியல் பூர்வமாக எதிர்வு கூறியுள்ளார்.
ஐ.பி.எல். தொடர்பில் எதிர்வு கூறியுள்ள கிரீன்ஸ்டோன்,
இந்த கணிப்பு ஒவ்வொரு அணியின் தலைவர்களின் ஜாதக நிலையை வைத்து கணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இம்முறை மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடரஸ் அணிகளுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இவர்கள் ஏற்கனே வெற்றியின் கனியை இருமுறை சுவைத்து விட்டார்கள். குறித்த இரு அணியிலும் நட்சத்திர வீரர்களான லசித் மாலிங்க, யூசுப் பதான் மற்றும் ஹர்பதான் சிங் போன்றோர் காணப்பட்டாலும் அவர்கள் வலுவிழந்த நிலையில் உள்ளனர். இதனால் குறித்த அணிகளுக்கு அவர்களால் கூடுதலான பங்களிப்பு வழங்க முடியாது.
இதேவேளை அவுஸ்திரேலிய அணியின் வீரர்களான ஸ்டீவன் ஸ்மித் மற்றும் கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோரின் ஜாதகங்கள் ஏனைய அணித் தலைவர்களுடன் ஒப்பிடும் போதும் மிகவும் வலுவிழந்த நிலையில் காணப்படுகின்றன.
ரைசிங் புனே சுப்பர் ஜிகாண்ட் அணித் தலைவராக ஸ்டீவன் ஸ்மித் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக புதிதாக தெரிவு செய்யப்பட்ட கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோரின் அணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என கூறப்பட்டாலும் அவர்களால் வெற்றிப்பெற முடியாது.
இதேவேளை ரைசிங் புனே சுப்பர் ஜிகாண்ட் அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ள ஸ்டீபன் பிளேமிங், ஏற்கனே சென்னை அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த காலத்தின் வெற்றியின் கனியை சுவைத்துள்ளார். எனவே தற்போது அவர் ரைசிங் புனே சுப்பர் ஜிகாண்ட் அணியின் பயிற்றுவிப்பாளராக இருப்பதாலும் ரைசிங் புனே சுப்பர் ஜிகாண்ட் அணி கிண்ணத்தை வெல்லாது.
இதேவேளை விரேந்திர செவாக் இடம்பித்துள்ள கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி ஒப்பீட்டளவில் பலவீனமானதாக உள்ளது. எனினும் இந்த அணியின் தலைவராக இயோன் மோர்கனை நியமித்திருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும்.
அணித் தலைவராக இயோன் மோர்கள் செயற்பட்டால் களமிறங்கும் பதினொருவர் அணியில் முரளி விஜய், ஷோன் மார்ஷ் மற்றும் டெரன் சமி ஆகியோர் இடம்பிடிக்காவிட்டாலும் அணி வெற்றி பெறும். எனினும் கிளேன் மெக்ஸ்வெல் அணியை வழிநடத்துவதால் பஞ்சாப் அணி வெற்றி பெறாது.
இதேவேளை இந்தாண்டு நடக்கும் 10 வது ஐபிஎல் தொடரை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் லயன்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை டெல்லி அணி ஏனைய அணிகளுக்கு இம்முறை கடும் சவாலளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த கணிப்பு ஒவ்வொரு அணியின் தலைவர்களின் ஜாதக நிலையை வைத்து கணித்துள்ளதாகவும் ஒருவேளை திடீரென்று அணியில் தலைவர்கள் மாறினால், இந்த கணிப்புகளும் மாறும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM