பாக்கு நீரிணை தொடர்பில் எவ்விதமான புதிய ஒப்பந்தமும் எட்டப்படவில்லை - அலி சப்ரி

Published By: Digital Desk 7

30 Jun, 2024 | 09:29 AM
image

(ஆர்.ராம்)

பாக்கு நீரிணையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எல்லை தொடர்பில் எந்த விதமான புதிய ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பாக்.ஜலசந்தி மற்றும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் நோக்கிய எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார். 

பாக்.ஜலசந்தி மற்றும் கச்சத்தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை குறித்தும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை (28) இந்தியாவின் ‘த இந்து’ நாளிதழ் வெளியான செய்தி தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘த இந்து’ நாழிதழ் புதிய ஒப்பந்தமொன்று செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்பந்தம் பற்றிய எந்தவிதமான உள்ளடக்கங்களையும் வழங்கவில்லை. அதேபோன்று தான் கலந்துரையாடல்கள் பற்றிய விடயத்தினையும் குறிப்பிட்டுள்ளது. எனினும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அவ்வாறான கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை.

ஆகவே, ‘த இந்து’ வெளியிட்ட தகவல்களுக்கு அமைவாக எந்தவிதமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24
news-image

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள்...

2025-02-11 17:22:36
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி...

2025-02-11 17:04:54
news-image

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் விடுத்துள்ள...

2025-02-11 16:25:59
news-image

வவுனியாவில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன்...

2025-02-11 16:23:23
news-image

திருகோணமலையில் நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூவர்...

2025-02-11 16:15:00
news-image

முச்சக்கரவண்டி மோதி ஒருவர் உயிரிழப்பு ;...

2025-02-11 16:10:33
news-image

புதிய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை...

2025-02-11 16:45:37
news-image

கஞ்சா, ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-11 16:02:43