சரக்கு விமான சேவைகள் மூலமாக நாட்டுக்கு அனுப்பப்பட்ட 18 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்கள் வெள்ளிக்கிழமை (28) கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த போதைப்பொருட்கள் தயிரில் இருந்து எடுக்கப்பட்ட புரதங்களின் பவுடர் என கூறி அனுப்பப்பட்டுள்ளது.
சீதுவையில் உள்ள வெளிநாடுகளுக்கு பொதிகள் அனுப்பும் சேவை நிறுவனம் ஒன்றிலிருந்து இந்த போதைப்பொருட்கள் சுங்க திணைக்கள போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அவற்றில், 2 கிலோகிராம் 30 கிராம் கொக்கைன் மற்றும் 2 கிலோகிராம் 177 கிராம் கஞ்சா வகை குஷ் போதைப்பொருட்கள் இருந்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 185,640,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் பொதிகள் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து கடவத்தை மற்றும் கொழும்பு ஆகிய இரண்டு முகவரிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த முகவரிகள் போலியானவை என உறுதிப்படுத்தப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் சுங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM