31 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (28) வெள்ளிக்கிழமை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவர் இன்றையதினம் அதிகாலை 04.35 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த பெண் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 100 கார்ட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவர் அதிகாலை 05.00 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 58 கார்ட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி 31 இலட்சம் ரூபா என விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி நீர் கொழும்பு நீதிமன்றில் ஆஜராகுமாறு விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM