சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் மெய்வல்லுநர் போட்டியில் அசத்திய மலையக வீரர்கள் சசிகுமார், விஜிந்த்

Published By: Digital Desk 7

28 Jun, 2024 | 02:55 PM
image

(நெவில் அன்தனி)

சிங்கப்பூர், கல்லாங் விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றிய மலையகத்தைச் சேர்ந்த மெய்யப்பன் சசிகுமார், துரைசாமி விஜிந்த் ஆகிய இருவரும் பதக்கங்கள் வென்று வரலாறு படைத்துள்ளனர்.

13 நாடுகள் பங்குபற்றிய இப் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் மெய்வல்லுநர் சங்கம் சார்பாகவே அவர்கள் இருவரும் பங்குபற்றினர். இலங்கையிலிருந்து 46 பேர் கலந்துகொண்டதுடன் அவர்கள் இருவர் மாத்திரமே மலையகத்தைச் செர்ந்த நம் இனத்தைச் சார்ந்வர்களாவர்.

இராகலை சென். லேனார்ட் தோட்டத்தைச் சேர்ந்தவரும்  முன்னாள் தேசிய மற்றும் சர்வதேச பதக்க வீரர் மனோகரனின் சகோதரருமான சசிகுமார் 3 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கதையும் வென்றெடுத்தார்.

ஆண்களுக்கான 1500 மீற்றர், 800 மீற்றர், 80 மீற்றர் தடைதாண்டி ஓட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் தங்கப் பதக்கங்ளை சுவீகரித்த சசிகுமார், ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை அணியிலும் அங்கம் வகித்தார்.

இதேவேளை விஜிந்த், 2 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றெடுத்தார்.

ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியிலும் 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டத்திலும் தங்கப் பதக்கங்களை வென்றெடுத்த விஜிந்த், நீளம் பாய்தல், உயரம் பாய்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்தார்.

சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் மெய்வல்லுநர் போட்டிகளில் பெரும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் பங்குபற்றியே பதக்கங்களை வென்றெடுத்ததாக நாடு திரும்பியதும் விஜிந்த், சசிகுமார் ஆகிய இருவரும் தெரிவித்தனர்.

'சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் பல வாரங்களாக கவலையுடன் இருந்ததோம். ஏனேனில் சிங்கப்பூருக்கான விமான டிக்கெட், சிங்கப்பூரில் தங்குமிட வசதிகள் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கு எங்களுக்கு கணிசமான பணம் தேவைப்பட்டது. வேறுவழியின்றி நெருங்கிய நண்பர்கள், வர்த்தகர்கள் ஆகியோரிடம் நாங்கள் எங்களது தேவையைக் கூறி கையேந்தி நின்றோம். நாங்கள் அண்டியவர்கள் அனைவரும் மனமுவந்து தங்களாலான நிதி உதவியை வழங்கி எங்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர். சிங்கப்பூரில் நாங்கள் பதக்கங்களை வென்றதும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தோம். ஏனேனில் இந்த வெற்றிகள் அனைத்தும் எங்களுக்கு உரியதல்ல. எங்களுக்கு பண உதவி செய்து அனுப்பிவைத்தவர்ககளுக்கே எங்களது வெற்றியின் பெருமை சேரும். அவர்களுக்கு நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேமாம்' என வஜிந்த், சசிகுமார் ஆகிய இருவரும் வீரகேசரி 'e பத்திரிகை'க்கு தெரிவித்தனர்.

இன்னும் சில மாதங்களில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலக மாஸ்டர்ஸ் மெய்வல்லுநர் போட்டியிலும் பங்குபற்றவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள் இருவரும் அங்கும் பதக்கங்கள் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துக்கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36
news-image

முதலில் துடுப்பாட்டத்திலோ, பந்துவிச்சிலோ ஈடுபட்டால் அதில்...

2025-02-05 20:39:54
news-image

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அரங்கிலேயே சர்வதேச...

2025-02-05 20:26:28
news-image

ரி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி...

2025-02-05 13:38:39
news-image

துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக்...

2025-02-03 18:09:33
news-image

19 வயதின் கீழ் மகளிர் உலகக்...

2025-02-03 15:26:27