ஓரினச்சேர்க்கையாளர்களை ஏமாற்றி கப்பம் பெற்ற மூவர் கைது

28 Jun, 2024 | 03:08 PM
image

ஓரினச்சேர்க்கையாளர்களிடம் கப்பம் பெற்றதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் மிரிஹான தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நீண்ட காலமாக இவ்வாறு அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மூவரும் சமூக ஊடகமொன்றில் அறிமுகமான பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரிடம் அவரைப் போன்று பல ஓரினச்சேர்க்கையாளர்களை அறிமுகம் செய்து வைப்பதாகக் கூறி புறக்கோட்டை, வெஹரகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வரவழைத்துள்ளனர்.

பின்னர், சந்தேக நபர்கள் அந்த நபரை தாக்கி நிர்வாணமாக காணொளி எடுத்து அதனை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தி ஒரு இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் இது  தொடர்பில் மிரிஹான தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்ட போது  ஓரினச்சேர்க்கையாளர்களின் காணொளிகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர்கள் 41 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் சீரற்ற வானிலையால் 62 குடும்பங்களைச்...

2025-01-22 17:23:45
news-image

மயிலத்தமடு ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு -...

2025-01-22 17:24:17
news-image

மருதானை பொலிஸ் சிறைக்கூண்டில் உயிரிழந்த நிலையில்...

2025-01-22 17:19:30
news-image

அட்டன் கல்வி வலயத்தில் முறையற்ற ஆசிரிய...

2025-01-22 17:04:01
news-image

அத்துருகிரிய - கொடகம வீதியில் விபத்து...

2025-01-22 17:02:01
news-image

பிழையான பெயர் :  தன் மீது...

2025-01-22 17:00:51
news-image

நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது...

2025-01-22 16:55:12
news-image

மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் 4 வான்கதவுகள்...

2025-01-22 17:05:37
news-image

யாழ் வர்த்தக கண்காட்சி

2025-01-22 17:01:03
news-image

லசந்த தாஜூதீன் படுகொலைகளிற்கு நீதியை வழங்குவது...

2025-01-22 16:57:26
news-image

தெஹிவளை - கல்கிசையில் சுவர்களில் சிறுநீர்...

2025-01-22 16:36:48
news-image

கம்பளை - கண்டி பிரதான வீதியில்...

2025-01-22 17:01:27