ஓரினச்சேர்க்கையாளர்களிடம் கப்பம் பெற்றதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் மிரிஹான தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீண்ட காலமாக இவ்வாறு அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மூவரும் சமூக ஊடகமொன்றில் அறிமுகமான பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரிடம் அவரைப் போன்று பல ஓரினச்சேர்க்கையாளர்களை அறிமுகம் செய்து வைப்பதாகக் கூறி புறக்கோட்டை, வெஹரகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வரவழைத்துள்ளனர்.
பின்னர், சந்தேக நபர்கள் அந்த நபரை தாக்கி நிர்வாணமாக காணொளி எடுத்து அதனை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தி ஒரு இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் இது தொடர்பில் மிரிஹான தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்ட போது ஓரினச்சேர்க்கையாளர்களின் காணொளிகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர்கள் 41 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM