எம்மில் சிலர் விருந்துகளிலோ அல்லது சுப நிகழ்வுகளிலோ பங்குபற்றும்போது அங்கு பசியாறும் உணவின் காரணமாக அல்லது அந்த உணவில் நஞ்சு கலந்திருப்பதன் காரணமாக அல்லது அந்த உணவின் ஒவ்வாமை காரணமாக குமட்டல் உணர்வோ அல்லது வாந்தி பாதிப்போ ஏற்படக்கூடும். எம்மில் பலரும் இத்தகைய குமட்டல் அல்லது வாந்தி பாதிப்பை எதிர்கொண்டு இருந்தாலும்.. அதற்குரிய முக்கியத்துவம் தராமலும், போதிய அளவிற்கு சிகிச்சை எடுக்காமலும் கடந்துவிடுவர். ஆனால் வாந்தியும், குமட்டலும் ஒரு சில நோய் பாதிப்பின் அறிகுறிகள் என்பதால்... குறிப்பாக ஒற்றைத் தலைவலி மற்றும் மூளை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கக்கூடும் என்பதால்... இந்த பாதிப்பு ஏற்பட்ட பிறகு அல்லது இந்த பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரை அணுகி ஆலோசனையும், சிகிச்சையும் பெறவேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
எம்முடைய செரிமான மண்டலத்தின் சீரற்ற இயக்கம், நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவு ஆகியவற்றின் காரணமாகவும் குமட்டலும், வாந்தியும் ஏற்படக்கூடும். வாந்தி என்பது வாய் வழியாக வயிற்றில் உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் ஏனையவை வெளியே வருவதாகும். குமட்டல் என்பது வாந்தி எனும் நிலைக்கு முன்னர் ஏற்படும் ஒருவித விரும்பத்தகாத அசௌகரியமான உணர்வாகும். இவை தீவிர நிலை இல்லை என்றாலும்.. இதனை அலட்சியப்படுத்தாமல் சிகிச்சை பெற வேண்டும்.
நாடி துடிப்பில் சீரற்ற தன்மை, உலர் வாய், மயக்கம், தலைசுற்றல், வயிற்றுப் பகுதியில் வலி, மனக்குழப்பம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் குமட்டலும், வாந்தியும் ஏற்படக்கூடும்.
விரும்பாத பயணம், பித்தப்பை வீக்கம், ஒற்றை தலைவலி, தலைசுற்றல், வயிற்றுப் புண்கள், அதீத அமிலத்தன்மை, மூளை பகுதியில் ஏற்படும் காயம், மூளை புற்றுநோய், பேறு காலத்தின் முதல் மூன்று மாதங்கள், அச்சம், விரும்பத்தகாத மணம், உணவின் ஒவ்வாமை, நஞ்சாக மாற்றம் பெற்ற உணவு, புற்றுநோய்க்காக வழங்கப்படும் கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு தெரபி ஆகிய பல காரணங்களால் எமக்கு குமட்டலும் வாந்தியும் ஏற்படக்கூடும்.
இந்தத் தருணத்தில் வைத்தியர்கள் நோயாளிகளுக்கு எதன் காரணத்தினால் வாந்தி ஏற்படுகிறது என்பதனை பிரத்யேக ஆய்வுகள் மற்றும் ரத்த பரிசோதனை ஆகியவற்றின் மூலம் துல்லியமாக அவதானித்து வகை படுத்துவர். அதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட மருந்தியல் சிகிச்சைகள் மூலம் இதற்கு முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். சிலருக்கு இதன் போது வாழ்க்கை நடைமுறையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் சில பரிந்துரைகளை வைத்தியர்கள் வழங்குவர்.
- வைத்தியர் ஸ்ரீ தேவி
தொகுப்பு : அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM