திருகோணமலை, மூதூர் பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (25) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
புலமைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் நேற்று (25) பிற்பகல் பாடசாலையில் மேலதிக வகுப்பொன்றில் கலந்து கொண்டனர்.
இதன்போது, பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றிலிருந்த குளவிக் கூடொன்றிலிருந்த குளவிகள் கலைந்ததால் அங்கிருந்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்தவர்கள் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
22 மாணவர்களும் 8 மாணவிகளும் ஒரு ஆசிரியருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM