சுதந்திர கட்சியைச் சீரழிப்பவர்களின் சதித்திட்டங்களை விரைவில் அம்பலப்படுத்துவேன் - அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

Published By: Vishnu

25 Jun, 2024 | 03:49 AM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சீரழிப்பவர்களின் சதித்திட்டங்களை விரைவில் அம்பலப்படுத்துவேன். நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டியில் திங்கட்கிழமை (25) சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

1994ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியமைக்கும் தரப்பு வெற்றிப் பெற்றுள்ளது. இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற 6 தேர்தல்களிலும் கதிரை, வெற்றிலை, அன்னம் மற்றும் மொட்டு சின்னங்களில் சுதந்திர கட்சி போட்டியிட்டுள்ளது. அதே போன்று இம்முறை தேர்தலில் புதிய சின்னத்தை அறிமுகப்படுத்துவோம்.

கட்சி யாப்பிற்கமைய நானே தலைவர். எனினும் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளமையால் தற்காலிகமாக நான் அந்த பதவியில் செயற்படவில்லை. வரும் தினங்களில் நீதிமன்றத்தினால் பொருத்தமான தீர்ப்பு வழங்கப்படும். எமது அரசியலமைப்பிற்கேற்ப தகுதியான எவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும். அதுவே ஜனநாயகமாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சீரழிப்பவர்களின் சதித்திட்டங்களை விரைவில் அம்பலப்படுத்துவேன். அதற்கான நேரம் இதுவல்ல. பொறுத்தமான நேரத்தில் அனைத்தையும் பகிரங்கப்படுத்துவேன். நான் நிச்சயம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன். வெற்றி பெறுவேன். எமது வெற்றியின் பின்னர் எனக்கெதிரான அனைத்து வழக்குகளும் அரசியலமைப்பிற்கமைய செயலிழக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2025-02-13 17:24:17
news-image

காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி...

2025-02-13 17:14:25
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-13 17:01:09
news-image

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் பூதவுடல்...

2025-02-13 16:55:46
news-image

மின்சார துண்டிப்பு - திருமண மண்டப...

2025-02-13 16:37:11
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-13 16:25:44
news-image

டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை

2025-02-13 15:52:58
news-image

எமது சமூகம் கட்டுக்கோப்புடன் வாழ அடித்தளம்...

2025-02-13 15:46:20
news-image

ராகமவில் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-13 15:33:30
news-image

வட மாகாணத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்த...

2025-02-13 15:36:23
news-image

ரஸ்ய உக்ரைன் யுத்தம் ஆரம்பமாகி மூன்று...

2025-02-13 15:15:29
news-image

நாட்டில் 2,000 வைத்தியர்கள் சுகாதார சேவையிலிருந்து...

2025-02-13 15:30:19