மாத்தளை பிரதேசத்தில் வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹதுன்கமுவ -ஹெட்டிப்பொல வீதியில் நாமினி ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
வில்கமுவையிலிருந்து ஹதுன்கமுவ நோக்கிப் பயணித்த முச்சக்ரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் பயணித்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதி வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டி சாரதியும், உழவு இயந்திரத்தில் பயணித்த மூவரும் காயமடைந்துள்ள நிலையில் வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல் தெவகிரிய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மூவரும் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் வில்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வில்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM