தேர்தலை அடிப்படையாக வைத்து நாடகமொன்றை அரங்கேற்ற தயாராகிறார் ஜனாதிபதி - எஸ்.எம்.மரிக்கார் !

24 Jun, 2024 | 08:50 PM
image

(எம்.மனோசித்ரா)

வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக ஜனாதிபதிக்கோ, பாராளுமன்றத்துக்கோ கூற முடியாது. கடன் சுமையிலுள்ள நாடுகள் பட்டியலை வெளியிடும் சர்வதேச நிறுவனங்களுக்கே அதனை அறிவிக்க முடியும். தேர்தலை அடிப்படையாகக் கொண்டு நாடகமொன்றை அரங்கேற்றுவதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். 

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 

புதனன்று நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டுவிட்டதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் 21ஆம் திகதி ஜனாதிபதி இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 

இந்த அறிவித்தலின் பின்னரே வட் வரியும் அதிகரிக்கப்பட்டது. எனவே இம்முறையும் அவ்வாறு ஏதேனும் இடம்பெறுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. அவ்வாறெனில் இவ்வாண்டில் மீண்டும் எதற்காக அந்த அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது? 

வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக ஜனாதிபதிக்கோ, பாராளுமன்றத்துக்கோ கூற முடியாது. கடன் சுமையிலுள்ள நாடுகள் பட்டியலை வெளியிடும் மோடிஸ், பிட்ச் ரேட்டிங் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுக்கே அதனை அறிவிக்க முடியும். அடுத்த மாதம் 17ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெறும். 

எனவே தற்போது அதனை அடிப்படையாகக் கொண்டு நாடகமொன்று அரங்கேற்றப்படவுள்ளது. தேர்தல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சகல கருத்து கணிப்புக்களிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றார். எனவே இதுவரையிலும் தேர்தலில் என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் குழுவினரை தம் பக்கம் ஈர்ப்பதற்காகவே ஜனாதிபதி இந்த நாடகத்தை அரங்கேற்றுகின்றார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-06-22 06:20:32
news-image

தம்பலகாமம் கண்டி திருகோணமலை 98ம் கட்டை...

2025-06-22 00:57:55
news-image

யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்...

2025-06-22 00:54:56
news-image

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று...

2025-06-22 00:22:48
news-image

நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி...

2025-06-21 12:54:28
news-image

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-06-21 21:27:01
news-image

பொது மன்னிப்பினை இரத்து செய்வதற்கு அரசாங்கம்...

2025-06-21 13:16:18
news-image

மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு எதிராக...

2025-06-21 20:40:23
news-image

இலஞ்சம் பெற்றதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ...

2025-06-21 20:01:07
news-image

மோசடியான முறையில் தேசிய மக்கள் சக்தி...

2025-06-21 15:05:15
news-image

மோதல் நிலைமை தனியும் வரை இஸ்ரேலுக்கு...

2025-06-21 17:09:55
news-image

பதுளை - துன்ஹிந்த வீதியில் பஸ் ...

2025-06-21 21:07:22