மொனராகலை பிரதேசத்தில் கராடுகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கராடுகல பொலிஸார் தெரிவித்தனர்.
கராடுகல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இவர் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறுமி தனது சம்பளத்தைப் பெற்றுக் கொள்வதற்காகத் தான் வேலை செய்யும் கடைக்குச் செல்வதாகக் கூறி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாகவும் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து காணாமல்போன சிறுமியின் குடும்பத்தினர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கராடுகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM