குருவிக் கூடொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு 14 மாதம்பிட்டி பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 46 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,வத்தளை ஹுணுப்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் உள்ள குருவிகள் இல்லாத குருவிக் கூடொன்றில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குருவிக் கூடொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து 442 கிராம் 225 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM