தமிழக மீனவர்கள் கைது: இந்திய வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

24 Jun, 2024 | 02:49 PM
image

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குதமிழக  முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “எனது முந்தைய கடிதத்தில் சுட்டிக் காட்டியது போன்று மீனவர்களை கைது செய்தல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்வதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் மீனவர்கள் சமுதாயத்தினரிடையே மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜூன் 22) அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள், IND-TN-10-MM-84, IND-TN-10-MM-88 மற்றும் IND-TN-10-MM-340 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதேநேரம், ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கு மீட்புப் படகுகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோன்று, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதலும் அடிப்படைத் தேவைகளையும் வழங்கிட அனுமதி தர வேண்டுமென தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மீனவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைத்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கான் அகதிகளிற்கும்...

2025-01-21 16:08:47
news-image

துருக்கியில் ஹோட்டலில் தீ : 66...

2025-01-22 02:51:26
news-image

பணயக்கைதிகளிற்கு நினைவுப்பரிசுகளை வழங்கிய ஹமாஸ்

2025-01-21 11:37:02
news-image

காசாவில் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட...

2025-01-21 11:04:38
news-image

தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு:...

2025-01-21 10:05:55
news-image

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறுகின்றது அமெரிக்கா-...

2025-01-21 08:30:11
news-image

அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் அவசரகாலநிலை-குடியேற்றவாசிகள் நாடு...

2025-01-20 23:09:44
news-image

எனது உயிர் ஒரு நோக்கத்திற்காகவே காப்பாற்றப்பட்டது-...

2025-01-20 23:01:43
news-image

அமெரிக்காவின் பொற்காலம் உதயம் - ஜனாதிபதியாக...

2025-01-20 22:54:22
news-image

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக பதவியேற்றார்...

2025-01-20 22:45:39
news-image

பதவியேற்பதற்காக ரொட்டுன்டா வந்தார் டிரம்ப்

2025-01-20 22:26:20
news-image

டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் அமெரிக்க முன்னாள்...

2025-01-20 22:19:13