''தமிழகத்தில் சாதி வாரியிலான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டுவரப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி பேசும் போது, ''வன்னியர்களுக்கான 10. 5 சதவீத இட ஒதுக்கீடு நீண்ட நாளாக கிடப்பிலுள்ளது என்றும், சாதி வாரியிலான கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்'' என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, '' வன்னியர்களுக்கான 10 . 5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த தரவுகள் இல்லாததால் உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் நிறுத்தி வைத்துள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு அரசு எந்த விதத்திலும் தடையாக இல்லை. சாதி வாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எளிதாக இருக்கும் '' என பதிலளித்தார்.
தொடர்ந்து இது குறித்து பாமக உறுப்பினர் ஜிகே மணி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் மு க ஸ்டாலின், '' சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டுவரப்படும் அதுவும் இந்த கூட்டத்தொடரிலேயேத் தீர்மானம் கொண்டுவரப்படும் '' என உறுதியளித்தார்.
இருப்பினும் இவ்விடயம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு போதிய அளவு பேசுவதற்கு வாய்ப்பு தரப்படவில்லை என எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM