துபாயில் மறைந்திருந்த இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பிலிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர் .
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கிராண்ட்பாஸ், நாகலகம் வீதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்திற்குப் பின்னால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைதானவர் கொழும்பு 14 பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன் இவரிடமிருந்து 12 கிராம் 360 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
துபாயில் தங்கியிருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான துபாய் கசுன் மற்றும் லஹிரு ஆகியோருடன் தொடர்பிலிருந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM