'ஸ்கோலியோசிஸ்' பற்றி பொது விழிப்புணர்வுக்காக சுகாதார அமைச்சர் தலைமையில் பேரணி

23 Jun, 2024 | 03:39 PM
image

(எம்.மனோசித்ரா)

முதுகெலும்பின் 'S' வடிவத்துக்கு வழிவகுக்கும் ஒரு நிலையான 'ஸ்கோலியோசிஸ்' எனப்படும் நோய் நிலைமை பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (23) விசேட பேரணியொன்று இடம்பெற்றது. 

தேசிய ஸ்கோலியோசிஸ் விழிப்புணர்வு தினம் ஜூன் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் இந்த நடைபேரணி இடம்பெற்றது.

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமான பேரணியானது லிப்டன் சுற்றுவட்டத்தை கடந்து சுதந்திர மாவத்தையில் உள்ள சத்திர சிகிச்சை கல்லூரி வரை சென்றது. 

இந்த பேரணி இலங்கை எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் மற்றும் இலங்கை முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது. அணிவகுப்பைத் தொடங்குவதற்கு முன் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்கோலியோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளின் நலம் குறித்தும் கேட்டறிந்தனர்.

ஸ்கோலியோசிஸ் என்பது முதுகெலும்பு 'S' வடிவத்தில் சிதைந்துவிடும் ஒரு நிலையாகும். இந்த குறைபாட்டின் தீவிரம் வயது மற்றும் குழந்தை வளரும்போது அதிகரிக்கலாம். இவற்றில், மிக அதிகளவு வளைவு கொண்ட சிதைவுகள் மார்புக் குழியின் சுருக்கம் மற்றும் இதயம் மற்றும் நுரையீரலின் செயற்பாட்டை பாதிக்கலாம். இதனால் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல் திறன்களைக் குறைக்கிறது. இந்த நிலை உடல் பலவீனம் மட்டுமல்ல, மனதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த பேரணியில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன், சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, சீமாட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹெக்டர் வீரசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் விஜேசூரிய, இலங்கை எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர், இலங்கை எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கம் மற்றும் இலங்கை முதுகெலும்பு சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் விசேட நிபுணர்கள், வைத்தியர்கள், மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16