(எம்.எம்.சில்வெஸ்டர்)
ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவில் நடைபெற்று வருகின்ற 9ஆவது ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் சில போட்டிகளில் மழை காரணமாக போட்டிகள் கைவிடப்பட்டிருந்தது. இந்த போட்டிகள் கைவிடப்பட்டதன் சுப்பர் 8 சுற்று வாய்ப்பில் சில அணிகளுக்கு சாதகமாகவும், சில அணிகளுக்கு பாதகமாகவும் அமைந்திருந்தன. ஐ.சி.சி.யின் இந்த தீர்மானங்களால் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் குழு 'பீ'க்கான லீக் சுற்றில் தீர்மானம் மிக்க போட்டியாக இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டி அமைந்தது. இங்கிலாந்து அணி சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமாயின், இப்போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
இந்நிலையில், இப்போட்டி மழை காரணமாக மிக நீண்ட நேரம் ஆரம்பிக்கப்படாமல் இருந்தது. குறிப்பாக, 'ஏ' குழுவில் பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதவிருந்த போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் 90 நிமிடங்கள் மாத்திரம் காத்திருந்து போட்டி கைவிடப்பட்டதாக ஐ.சி.சி. அறிவித்தது. இதனால் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் பாகிஸ்தானின் வாய்ப்பு அற்றுப்போனதுடன், ஐக்கிய அமெரிக்கா முன்னேறியது.
இருப்பினும், இங்கிலாந்து, நமீபியா அணிகள் மோதிய போட்டியில் 3 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் மழை குறுக்கிட்டிருந்தபோதிலும் போட்டி கைவிடப்பட்டதாக ஐ.சி.சி. அறிவிக்கவில்லை. ஐ.சி.சி விதிமுறைகளை மீறி செயற்பட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. நடப்புச் சம்பியனான இங்கிலாந்தை எப்படியாயினும், சுப்பர் 8 சுற்றுக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் ஐ.சி.சி. இவ்வாறு செயற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் ஐ.சி.சி. மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடைசியில் இப்போட்டி அணிக்கு 10 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டு, இங்கிலாந்து வெற்றியும் பெற்றது. இதனால் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் ஸ்கொட்லாந்து அணியின் வாய்ப்பும் பறிக்கப்பட்டது. அத்துடன், மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதால், சில அணிகளின் வெற்றி வாய்ப்பும் பாதிக்கப்பட்டது. இங்கிலாந்து - நமீபியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஐ.சி.சி. காட்டிய பொறுமையை ஏன் அணிகளுக்கு இடையிலான முக்கிய போட்டிக்கும் காத்திருக்காமல், அவசர அவசரமாக போட்டி கைவிடப்பட்டிருந்தது ஏன்? எனவும் கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM