(நெவில் அன்தனி)
தேசிய ஒலிம்பிக் குழுவின் ஏற்பாட்டில் கண்டி திகன விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் ஒலிம்பிக் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கிலிருந்து திகன விளையாட்டுத் தொகுதி மைதானம் வரை நடைபெற்ற ஒலிம்பிக் தின ஊர்வலத்தை தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, ஒலிம்பிக் கொடியை அசைத்து ஆரம்பித்துவைத்தார்.
இந்த ஊர்வலத்திலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு வைபவங்களிலும் மத்திய மாகாணத்திலுள்ள பத்து பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், தேசிய மற்றும் மாகாண விளையாட்டு வீரர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பாரிஸ் நகரில் உள்ள சோர்போனில் நவீன ஒலிம்பிக் இயக்கம் 1894ஆம் ஆண்டு ஜூன் மாதம் உதயமானதை நினைவுகூரும் வகையில் 1948ஆம் ஆண்டில் ஒலிம்பிக் தினம் முதன் முதலில் கொண்டாடப்பட்டது.
ஒலிம்பிக் தினமானது உலகெங்கிலும் உள்ள இளைஞர், யுவதிகள் விளையாட்டுத்துறையில் பங்கேற்பதை ஊக்குவிப்பதுடன், சிறப்பு, நட்பு மற்றும் மரியாதை ஆகிய ஒலிம்பிக் மதிப்புகளை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் தினம் வழமையாக ஜூன் 23ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றபோதிலும் இலங்கையில் இவ் விழா கடந்த 19ஆம் திகதி கொண்டாடப்பட்டது. இது பொசன் பண்டிகை காலம் என்பதாலேயே இலங்கையில் முன்கூட்டியே ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டது.
ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு வரைதல் மற்றும் கைப்பணி போட்டி பெற்றோர் மற்றும் விளையாட்டுத்துறை ஆசிரியர்களுக்கு இடையிலான உரையாடல், மாணவர்களுக்கான உடற்தகுதி மற்றும் தடைதாண்டி ஓட்டம், மரம் நடுகை திட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டன.
பிரெஞ்சு தூதரகத்தின் கலாசார செயலாளர் ஒலிவியா பெல்மோர், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ. கமகே, தேசிய ஒலிம்பிக் குழு பிரதிநிதிகள் ஆகியோரும் ஒலிம்பிக் தின கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த வைபவத்தில் பேசிய தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, 'இந்த வருடம் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழா விழாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய வீரர்களே இலங்கை சார்பாக பங்குற்றுகின்றனர். ஆனால், லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு இலங்கையிலிருந்து விளையாட்டு வீரர்களை கூடுதலாக அனுப்பி வைக்கவும் பதக்கங்களை வென்றெடுக்கவும் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM