வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இரு பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சமாதானப்படுத்தும் நோக்கில் ஒரு பகுதியினர் மற்றைய பகுதியினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போதே ஒரு பகுதியினர் வாள்கள் கொண்டு மற்றைய பகுதியினர் மீது வெட்டியுள்ளனர். இச் சம்பவத்தில் வெட்டுக்காயத்திற்குள்ளனவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் மீது வைத்தியசாலையில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வெட்டுக்காயத்திற்குள்ளான இரு பகுதியினரைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 6 பேர் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM