அம்பாந்தோட்டையில் மாடுகள் திருட்டு ; சந்தேக நபர்கள் துப்பாக்கியுடன் கைது

22 Jun, 2024 | 10:18 AM
image

அம்பாந்தோட்டை  பிரதேசத்தில் லுணுகம்வெஹர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி மூன்று மாடுகளைத் திருடிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய  மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகம்வெஹர பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்டதாகக் கூறப்படும் மாடுகளின் மதிப்பு 10 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.

லுணுகம்வெஹர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 24,31 மற்றும் 48 வயதுடைய மூன்று  நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜகிரியவில் 300 வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை...

2026-01-20 17:52:25
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2026-01-20 16:27:36
news-image

இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை...

2026-01-20 17:29:24
news-image

களுவாஞ்சிக்குடியில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள்...

2026-01-20 17:30:24
news-image

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம்...

2026-01-20 16:45:08
news-image

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள்...

2026-01-20 16:34:05
news-image

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை...

2026-01-20 16:49:00
news-image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர்...

2026-01-20 16:17:04
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு...

2026-01-20 14:44:00
news-image

கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க...

2026-01-20 16:33:11
news-image

கிளிநொச்சியில் கடல் அட்டைகளுடன் 13 பேர்...

2026-01-20 14:32:20
news-image

வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள...

2026-01-20 15:19:48