'ஈழத்து திருச்செந்தூர்' என போற்றப்படும் கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு கும்பாபிஷேக பெருவிழா வியாழக்கிழமை (20) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கடந்த 16ஆம் திகதி கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாயின. இந்த கும்பாபிஷேக கிரியைகள் தமிழ் மொழியில் நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இலங்கையில் முதல் முதலாக தமிழில் இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள 21 கங்கை முதலான 21 கலங்களில் கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களை கொண்டு மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய தெய்வ நெறி தலைவர் சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி சுவாமி தலைமையில் பல இலங்கை, இந்தியாவின் ஆதீனங்களின் சுவாமிகள் ஒன்றிணைந்து இந்த கிரியைகளை நடாத்தினார்கள்.
புதன்கிழமை (19) அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வும் நடைபெற்றது.
இன்றைய தினம் காலை விசேட யாக பூஜைகள் நடைபெற்றதுடன், கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா (கும்பாபிஷேகம்) நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM